தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. டோக்கன் சிஸ்டம், ஆதார் கார்டு அவசியம், சமூக இடைவெளி, வயது வாரியாக நேரம் என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டும் அது முறையாக பின்பற்றப்படாததால் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் இன்று (மே 9) முதல் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் மட்டும் மது விற்பனையில் தமிழகம் புது உச்சத்தை தொட்டு உள்ளது.
டாஸ்மாக் கடைகள்:
தமிழகத்தில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு இருந்தன. மூன்றாம் கட்ட ஊரடங்கில் மதுபான விற்பனையை தொடங்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மது விற்பனை நடைபெற்றது. அங்கு ஒரு நாளைக்கு 40 முதல் 50 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெற்றது.
இந்நிலையில் மே 7 முதல் தமிழகத்திலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் அங்கு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. அப்படி இருந்தும் மே 7 அன்று மட்டும் தமிழகம் முழுவதும் 170 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று (மே 8) 122 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மொத்தமாக 294 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளது.
தமிழகத்தில் மதுரை மண்டலத்தில் தான் நேற்றும் அதிகளவில் மது விற்பனை நடைபெற்று உள்ளது. அங்கு 32.45 கோடி ரூபாய்க்கு நேற்று விற்பனை நடைபெற்றது. இன்று (மே 9) முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |