இந்து கடவுள்களை கொச்சைப்படுத்திய விஜய் சேதுபதி..? போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இந்து மகாசபா சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிகழ்ச்சி:

நடிகரான விஜய் சேதுபதி பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் இந்து கடவுள்களை அபிசேகம் மற்றும் அலங்காரம் செய்வது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பார். அபிசேகம் செய்யும் பொழுது வெளிப்படையாக காட்டுபவர்கள், அலங்காரம் செய்யும் பொழுது ஏன் மறைக்கிறார்கள் என்கிற வகையில் பேசி இருப்பார்.

இந்த சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக திருச்சி அகில இந்திய இந்து மகாசபா மாவட்ட செயலாளர் மணிகண்டன் சார்பில், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here