தமிழகம் முழுவதும் சமீப காலமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. அந்த வகையில் வரும் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவ வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.