IPL 2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 58 வது லீக் போட்டியில் பெங்களூர் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய பெங்களூர் 241 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 60 வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் பெங்களூர் அணியின் வெற்றிக்குப் பிறகு அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி முக்கிய கருத்தை கூறியுள்ளார்.அதில் என்னை பொறுத்தவரை, அளவைவிட தரம்தான் முக்கியம், நாங்கள் எங்களின் சுய மரியாதைக்காக விளையாட வேண்டும் என நினைத்தோம். ஏனோதானோ என விளையாடி ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. இப்போது மீண்டும் நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறி தனது கருத்தை முடித்துள்ளார்.