தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 26 முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வெழுதி இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தேர்வுக்கான முடிவுகள், நாளை (மே 10) காலை 09.30 மணி அளவில் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி தேர்வு எழுதிய மாணவர்கள், மேற்காணும் இணையதள முகவரியில், தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அல்லது தங்களது பள்ளிகளிலும், செல்போன் எண்ணில் SMS மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!