பிரசித்தி பெற்ற தென்கைலாயம் எனும் வெள்ளியங்கிரி மலை கோவிலுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்கள் மலை ஏற்றத்தின் போது உயிரிழந்து வருகின்றனர்.
அதன்படி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதால் மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது வெள்ளியங்கிரி செல்லும் பக்தர்கள் முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த கோவிலுக்கு பக்தர்கள் செல்ல மே மாதம் வரையில் மட்டுமே அனுமதி என்பது குறிப்பிடத்தக்கது.