உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மிகச் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா, கடந்த 12ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல், நாளை (ஏப்ரல் 23) காலை நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
மக்களே உஷார்.. தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அந்த வகையில் கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிடிக்க வேண்டும். மாறாக ரசாயனம் அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதேபோல் கள்ளழகர் வைபவத்தில், 2,400 பேர் மட்டுமே ஆற்றில் இறங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.