டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 28ம் தேதி கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அவர் அறிவித்த, பெண்களுக்கு ரூ.1,000 திட்டம் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
1, 5, 29, ? இந்த கேள்விக்கு ஈஸியாக விடையளிப்பது எப்படி தெரியுமா? வீடியோவுடன் விளக்கம் உள்ளே!!
அதாவது ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான காலக்கெடு அக்டோபர் ஆகும். அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட தடைகளை மீறி ஆம் ஆத்மி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதன்படி இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.