டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை, கெஜ்ரிவால் தரப்பினர் தாக்கல் செய்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் அமலாக்கத்துறையின் பெரும் எதிர்ப்பு இடையே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.