சமீபகாலமாக வழக்கத்திற்கு மாறாக ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய் தொற்றுகளும், பரவி வருகிறது. அந்த வகையில், தற்போது கேரளாவில் ‘வெஸ்ட் நைல்’ எனும் புதுவித காய்ச்சல் பரவி வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நோய் டெங்கு போன்ற நோய்களை போல், கொசுக்கள் மூலம் பரவி வந்தாலும், 80 சதவீதம் அறிகுறிகள் தென்படுவதில்லை என கூறப்படுகிறது.
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
இந்நிலையில் கேரளா திருச்சூர் மாவட்டத்தில் வெஸ்ட் நைல் நோயால் பாதிக்கப்பட்ட 47 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து கேரளாவுக்கு மிக அருகில் உள்ள கோவை மாவட்ட எல்லை கிராமங்களில், காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.