டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளாக கருதப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக புதிய நடைமுறைகளை அறிவித்துள்ளது, மத்திய ரிசர்வ் வங்கி. இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்று நம்பப்படுகிறது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு:
நாடு முழுவதிலும் தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த பரிவர்த்தனையின் போது பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பல புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த நடைமுறை இந்த மாதத்தில் இருந்து பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன நடைமுறைகள்:
பல புதிய நடைமுறைகள் மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலமாக வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது. அவை,
- ஏற்கனவே ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாமல் வைத்திருக்கும் கார்டுகளை வங்கியில் சென்று காட்டிய பிறகு தான் இனி பணபரிவர்த்தனை செய்ய முடியும்.
- ஏதேனும் ஆபத்து என்று தெரிந்தால் வங்கிகள் நடப்பு அட்டைகளை செயலிழக்க செய்து விட்டு புதிய அட்டைகளை வழங்கலாம்.
- ஒரு அட்டைதாரர் இந்தியாவுக்கு வெளியே டெபிட் கார்டு பயன்படுத்த விரும்பினால் வங்கியின் அனுமதி பெற வேண்டும். இதன் மூலமாக சர்வதேச பணப்பரிவர்த்தனையும் செய்யலாம்.
- புதிய நடைமுறைகளின்படி அட்டை பயனாளர்கள் தங்களது டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு “சுவிட்ச் ஆப்” மற்றும் “சுவிட்ச் ஆன்” வசதியை செயல்படுத்தி கொள்ளலாம்.
- இனி சர்வதேச பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவற்றிற்கு செலவு வரம்பிற்கேற்ப அமைத்து கொள்ளலாம்.
- ஏடிஎம் பரிவர்த்தனைகளில் இருந்து விலகிக் கொள்ளலாம்.
- இனி எந்த ஒரு பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றாலும் வங்கியை அணுகிய பின் தான் செயல்படுத்த முடியும். இயல்பு நிலையாக கிடைக்கும் சேவைகள் இனி கிடைக்காது.
- வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாடுகள், செயலி பயன்பாடுகள், கார்ட் பயன்பாடுகள் இவைகளில் மாற்றம் கொண்டு வர விரும்பினால் அனைத்து வங்கிகளும் 24/7 சேவை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறாக புதிய நடைமுறைகள் ரிசர்வ் வங்கியால் கொண்டு வரப்பட்டுள்ளது.