மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் சீசன் 4 நாளை தொடங்கவுள்ளது. மேலும் பல சஸ்பென்ஸ்களுடன் ப்ரோமோக்களும் வெளியாகி வருகின்றன. இதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களின் பெயர் நாளுக்கு நாள் வெளியான வண்ணம் இருந்தது. இந்நிலையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ஹீரோயின் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக் பாஸ்
விஜய் டிவியில் தற்போது டிஆர்பி ரேட்டிங் எகிறியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் பாரதி கண்ணம்மா மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் பல விறுவிறுப்பான கதைக்களத்துடன் போய்க்கொண்டுள்ளது. மேலும் மக்களை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பிக் பாஸ் நாளை முதல் தொடங்க உள்ளது.
இந்த பிக் பாஸ் ப்ரோமோ ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். மேலும் நாள்தோறும் இதில் கலந்து கொள்பவர்கள் பெயர் இணையத்தில் கசிந்து கொண்டே இருந்தது. பல பிரபலங்கள் இதற்கு மறுப்பும் தெரிவித்தனர்.
பிகில் பட நடிகையான அம்ரிதா ஐயர் கலந்து கொள்வதாக கூறி வந்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பதிவை வெளியிட்டார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. இதனால் மற்ற போட்டியாளர்களை ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஷிவானி மற்றும் ரம்யா பாண்டியன் வெளியிட்ட புகைப்படம் ஒரே இடத்தில் இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ளது. இதற்கு அவர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்த காயத்ரி பிக் பாஸில் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகின.
#BigBoss #gayathrie pic.twitter.com/ak4cRV9FZZ
— Gayathrie (@SGayathrie) October 3, 2020
நாளை பிக் பாஸ் தொடங்க இருக்கும் நிலையில் தற்போது காயத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் தான் பிக் பாஸில் கலந்து கொள்ள போவதில்லை உங்களுடன் சேர்த்து அதனை வீட்டில் இருந்து பார்க்க போகிறேன் என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.