![உலகின் நீளமான “அடல்” சுரங்கப்பாதை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!! உலகின் நீளமான “அடல்” சுரங்கப்பாதை – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!!](https://enewz.in/wp-content/uploads/2020/10/atal-tunnel--768x375.jpg)
இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் நீளமான சுரங்கவழி பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த எல்லை சாலைகள் 10 ஆண்டு கடுமையான உழைப்பிற்கு பரிசாக கிடைத்துள்ளது.
நீளமாக சுரங்கவழி பாதை:
இமாச்சலப் பிரதேசத்தின் மணாலியில் இருந்து லடாக்கின் லே பகுதியை இணைக்கும் அடல் ரோடங் சுரங்கப்பாதை 10 ஆண்டுகளுக்கு மேலாக கடுமையான உழைப்பால் அமைக்கப்பட்டுள்ளது. மணாலி பகுதியில் இருந்து லே பகுதிக்கு செல்லும் இந்த சுரங்கவழி பாதை 46 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு நெடிய நீளமான சுரங்கப்பாதை. சுரங்கப்பாதை கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரத்து 44 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 13 மீட்டர் அக்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது உலகின் நீளமான சுரங்கபாதையாக கருதப்படுகிறது.
பொறியியல் துறைக்கு சவால்:
இந்த சுரங்கப்பாதை அமைப்பதற்கு பொறியியல் துறைக்கு பெரும் சவாலாக இருந்தது. 10 ஆண்டுகள் கடுமையாக உழைத்ததின் பெயரில் தான் இந்த சுரங்கப் பாதைக்கான பணிகள் முடிவடைந்துள்ளன.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
நாட்டின் கடும் உழைப்பின் சின்னமாகவும் இது கருதப்படுகிறது. இந்த சுரங்கபாதையால் 46 கிலோ மீட்டர் பயண தொலைவு குறைகிறது. கூடுதலாக, கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளதால், மோட்டார் வாகனங்கள் கூட செல்லலாம்.
பிற சிறப்பம்சங்கள்:
இந்த சுரங்கப்பாதை பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. நவீன அம்சங்களையும் இந்த சுரங்கப்பாதை பெற்றுள்ளது. அது,
- ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவிற்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஹத்ராஸ் சம்பவத்தில் முதல்வர் ஆதித்யநாத் அதிரடி – காவல்துறை அதிகாரிகள் “சஸ்பெண்ட்”!!
- ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிற்கும் இடையே அவசர கால வெளியேறும் வசதி, தொலைபேசி வசதி, காற்றோட்டமான அமைப்புகள் என்று பலவற்றை தனக்குள் கொண்டுள்ளது.
- 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் திறப்பு:
Inaugurating the spectacular #AtalTunnel. https://t.co/Npiw0qSO5A
— Narendra Modi (@narendramodi) October 3, 2020
இத்தனை பெருமைகளையும் உடைய சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். பிரதமர் உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.