பாக்கியலட்சுமி சீரியலில் இப்பொழுது ராதிகா கர்ப்பமாக இருக்கும் சூழ்நிலையில் இதனை எப்படி கையாள்வது என்று தெரியாமல் கோபி முழித்து கொண்டிருக்கிறார். மேலும் ஈஸ்வரிக்கு ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்து விடவே கோவமடைகிறார்.
இந்த கர்ப்பத்தை கலைத்து விடு என்று சொல்ல ராதிகா அதற்கு தன்னால் முடியாது என்று மூஞ்சியில் அடித்தார் போல கூறிவிடுகிறார். இதற்கு பின்பு தான் வீட்டில் பெரிய பிரச்சனையே காத்து கொண்டுள்ளது.
அம்மாவின் பேச்சை கேட்டு கர்ப்பத்தை கலைக்கலாம் என்று ராதிகாவிடம் சொல்ல இதனால் பூகம்பமே வெடிக்குமாம். மேலும் ராதிகா வீட்டை விட்டு போக கூட வாய்ப்புள்ளது. மேலும் இந்த கர்ப்பம் கலைந்தால் இதை வைத்தே சீரியலை விறுவிறுப்பாக நகர்த்தி கொண்டு செல்லவும் வாய்ப்புகள் உள்ளது.