வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியது. இது இன்று இரவு 8 மணிக்கு மேல் அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த புயலின் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புகள் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பாலச்சந்திரன் அறிவிப்பு
கடந்த இரு தினங்களுக்கு முன்னே நிவர் என்ற புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 11 கி.மீ தொலைவில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிவர் புயல் அதிதீவிர புயலாக இன்று இரவு புதுச்சேரி அருகில் உள்ள கரையை கடக்கும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் நிவர் என்ற புயல் தற்போது வெளிச்சுற்று கரையை தொட்டு விட்டதாகவும் , புயல் கரையை கடந்த பிறகும் இதன் தாக்கம் 6 மணிநேரம் நீடிக்கும் என்றும் அறிவித்தார்.
கனமழைக்கு வாய்ப்பு
நிவர் என்ற புயல் தற்போது வெளிச்சுற்று கரையைத் தொட்டதின் விளைவாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஆகையால் நிவர் புயலின் தாக்கத்தால் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை உள்ள கடல்களில் 23 ஆடி உயரம் ராட்சஷ அலை உருவாகும். மேலும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை உள்ள கடல்களிலும் இத்தகைய அலை உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
புதுச்சேரி அருகே இன்று இரவு 8 மணிக்கு மேல் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று தெரிவித்தார் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர். மேலும் புயல் கரையை கடந்த பின்பு ஒரு சில மாவட்டங்களான ராணிப்பேட்டை, திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.