விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது குழந்தைக்கு பெயர் சூட்டும் விழாவில் எப்படியோ பல சண்டைகளுடன் கயல்விழி என்று குழந்தைக்கு அழகாக பெயர் வைத்தனர். இந்நிலையில் ஜீவா வீட்டிற்கு மீனா குழந்தையை அழைத்து கொண்டு வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்ப கதையம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரையிலும் முல்லை கதிர் ஜோடியை தான் மக்கள் விரும்பி வந்தனர். அவர்களே போட்டி கொடுக்கும் அளவிற்கு கண்ணனுக்கு புதிய ஜோடியை பாண்டியன் ஸ்டோர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த சீரியல் சுவாரசியம் குறைந்து ஒளிபரப்பானாலும் மக்கள் மத்தியில் உள்ள அந்த வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். நேற்றைய எபிசோடில் ஜீவாவின் தாய் குழந்தையை பாண்டியம்மா என்று அழைத்ததற்கு மீனா மிகவும் கோவப்பட்டார்.
மேலும் இந்த வீட்டிற்கே வர மாட்டேன் என்றும் மிரட்டினார். ஜனார்த்தனன் வீட்டில் மீனாவையும் குழந்தையையும் அழைப்பதற்காக ஜனார்த்தனன் கிளம்ப மீனாவின் அம்மா திடீரென கீழே விழ கையில் அடிபடுகிறது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று கையில் கட்டுபோடுகின்றனர்.
இதில் நேற்றிலிருந்து தனம் தலைசுற்றி மயக்கம் வருவதாக வேறு கூறுகிறார். கதையை கொண்டு போகும் விதத்தை வைத்து பார்க்கும்போது தனம் கர்ப்பமாக கூட இருக்கலாம். மேலும் மூர்த்தி வீட்டிற்கு வரும் ஜனார்த்தனன் நடந்தவற்றை கூற மீனா அமமாவிற்கு போன் செய்கிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
அவரின் அம்மா அங்கேயே இருக்கும்படியும் கூறுகிறார். இதனால் மீனாவிற்கு வருத்தமாகிறது. மேலும் அதன் பிறகு குழந்தையின் பெயரை பற்றி தனம், ஜீவா அம்மாவும் விவாதிக்கின்றனர். நான் கண்டிப்பாக குழந்தையை பாண்டியம்மா என்று தான் கூப்பிட போவதாக சொல்கிறார்.
அடுத்ததாக மீனாவை காட்ட குழந்தைக்கு வாங்குவதற்கு கூட கணக்கு பாக்குறீங்க என்று வழக்கம் போல சண்டையிடுகிறார். மேலும் அவர்கள் ரூமில் பேசிக்கொண்டிருக்க தனத்திடம் இருவரும் ஒன்றாக தூங்க கூடாது ஜீவாவை வெளியே படுக்க சொல் என்று கூறுகிறார்.
இதனால் தனமும் பதட்டமடைகிறார். இதோடு எபிசோடு முடிவடைகிறது. இப்பொழுது தனம் போய் மீனாவை வெளியே அழைத்தால் கண்டிப்பாக பிரச்சனை எழும். நாளைய எபிசோடில் பல சம்பவங்கள் காத்துக்கொண்டுள்ளது என்பது தெரிகிறது.