காலை உணவில் இட்லி, தோசை என வழக்கமாக சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். குழந்தைகள் கூட இட்லி தோசை என்றாலே வெறுக்கின்றனர். இப்பொழுது குழந்தைகள் விரும்பும் விதமான மசாலா தோசை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு
வெங்காயம் – 2
தக்காளி -2
பச்சைமிளகாய் – 3
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு சேர்த்து அதன் பின் பச்சைமிளகாயை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதன் பிறகு அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து சிறிது உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு வதக்கவும்.
தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து மேலே வரும் அப்பொழுது இறக்கவும். அதன் பிறகு தோசை கல்லை அடுப்பில் வைத்து மெல்லிசாக தோசை ஊற்றி அதன் மேல் இந்த கிரேவியை தோசையின் மேல் தடவவும். இப்பொழுது மூடி வைத்து திருப்பி போட்டு எடுத்தால் சூப்பரான மசாலா தோசை தயார்.