அன்றாட செய்ய வேண்டியது காலை மற்றும் இரவில் கண்டிப்பாக பல் துலக்க வேண்டும். நாம் சிறு வயதில் இருந்து பல் துலக்குவதற்கு மிகவும் சோம்பல்பட்டு அவசர அவசரமாக பற்களை துலக்குவோம். இதனால் பற்களில் சொத்தை, ஈறுகளில் ரத்த கசிவு போன்ற பல பிரச்சனைகள் வரும். இதை தடுக்கும் முறையில் வீட்டிலேயே இயற்கையான டூத் பேஸ்ட் செய்வதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பேக்கிங் சோடா
- உப்பு
- பெப்பெர்மென்ட் எசென்ஷியல் ஆயில்
- வடிகட்டிய நீர்
செய்யும் முறை:
ஒரு பௌல் எடுத்துக்கொள்ளுங்கள் அதில், பேக்கிங் சோடா, உப்பு, பெப்பெர்மென்ட் எசென்ஷியல் ஆயில் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பேஸ்ட் நிலையை அடையும் வரை கலந்துகொள்ளுங்கள்.
அவ்ளோதாங்க ஈஸியான மற்றும் இயற்கையான டூத் பேஸ்ட் ரெடி!!
பயன்கள்:
பேக்கிங் சோடா உங்கள் பற்களை சுத்தம் செய்யும். இதனால் அமிலத்தன்மையின் அரிப்பை தடுக்கிறது. உப்பு பற்களில் உள்ள கறையை அகற்ற உதவுகிறது. பெப்பெர்மென்ட் எசென்ஷியல் ஆயில் சுவாசத்தின் போது புத்துணர்வு கொடுக்கிறது மற்றும் பாக்டீரியாவையும் அழிக்கிறது. இந்த ஆயில் கிடைக்கவில்லை என்றால் சில புதினா இலைகளை உபயோகிக்கலாம்.