தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் எந்த மாற்றமில்லை என்று கூறியுள்ளார், முதலமைச்சர்.
கொரோனா ஆய்வு:
தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும், முதல்வர் அவர்கள் கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளபடுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டுவருகிறார்.
அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!!
அதில் இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு மேற்கொண்டுவிட்டு, மக்களுக்காக உரை ஒன்றை நிகழ்த்தினார்.
முதலமைச்சர் உரை:
முதலமைச்சர் பேசியதாவது ” கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எல்லா மாவட்டங்களிலும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்த தடுப்பு பணிகளில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் 28 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகம். இதுவரை 2.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன்முலமாக தெரியவில்லையா தமிழகம் தான் தடுப்பு நடவடிக்கைகளில் முன்னணியில் உள்ளது. நாம் திரும்பவும் இயல்பு நிலைக்கு திரும்புவோம். தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடரும். அதில் எந்த மாற்றமில்லை என்று கூறியுள்ளார்.