Sunday, May 19, 2024

போஜ்புரி திரையுலக நடிகை தற்கொலை – பொருளாதார பிரச்னை காரணமா??

Must Read

கடந்த சில நாட்களாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது, தற்போது “போஜ்புரி’ என்ற படத்தில் நடித்த நடிகை அனுபமா பதக் தற்கொலை செய்து கொண்டார்.

யார் இவர்:

அனுபமா, பீகாரில் உள்ள ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்தவர். இந்தியா திரைத்துறையில், ஒரு பிரபலமான நடிகை , பாடகி மற்றும் மாடல் ஆவார். போஜ்புரி திரையுலகில் பேசப்பட்ட நடிகை ஆவார்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

actress anupama pathak found dead
actress anupama pathak found dead

இவருக்கு தற்போது, 40 வயது ஆகிறது. இவர் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி தற்கொலை செய்துள்ளார். தற்போது, தான் அனைவர்க்கும் தெரியவந்துள்ளது. 4 நாட்கள் ஆன நிலையில், இவரது உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. தனது மும்பை வீட்டில் தற்கொலை செய்துள்ளார்.

ஏன் தற்கொலை??

இவர் தற்கொலை செய்வதற்கு முன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு லைவ் வீடியோ செய்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பது ” யாரையும் நம்பாதீர்கள். இந்த உலகில் அனைவரும் உங்களை ஏமாற்றுவார்கள் . உங்களது பிரச்சனைகளை எப்போதும் எவருக்கும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அவர்கள் அதனை பயன்படுத்தி, உங்களை அவமானம் செய்வார்கள் அனைவர் முன்னிலையிலும்” என்று கூறியுள்ளார்.

சென்னையில் 6 ஆண்டுகளாக இருக்கும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் – அச்சத்தில் மக்கள்!!

anupama pathak during her live in fb
anupama pathak during her live in fb

போலீசார் விசாரணையில், அவர் கடந்த சில வருடங்களாக பொருளாதார பிரச்சன்னையில் இருந்துள்ளார். கூடுதலாக ஒரு நிறுவனத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்துள்ளார், ஆனால், அந்த பணத்தை பெற்ற நிறுவனம் இவரை ஏமாற்றி உள்ளது என தெரிகிறது அதனால் தான் இவர் தற்கொலை செய்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -