விஜய் டிவியில் தற்போது பிரபலமாக மக்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா” தான். இன்றைய எபிசோடில் பல விதமான ட்விஸ்ட் ரசிகர்களுக்காக காத்து இருக்கிறது. இத்தனை நாட்கள் இல்லாத அளவுக்கு பாரதி இன்று கண்ணம்மா மீது கோவம் அடையப் போகிறார். அதற்கு காரணம் யாரு?? பார்க்கலாம் வாங்க.
யதார்த்த கதைக்களம்:
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் “பாரதி கண்ணம்மா”. இந்த சீரியலுக்கான கதைக்களம் மிகவும் யதார்த்தமானதாக இருந்த காரணத்தால் மக்கள் மனதில் இடம் பிடித்தது. ஆனால், இந்த பொது முடக்கத்திற்கு பிறகு ஒளிபரப்பான அனைத்து எபிசோடுகளும் பல திருப்பங்களுடன் இருந்து வந்தது. நிறைமாத கர்ப்பிணியான கண்ணம்மா வீட்டில் இருந்து வெளியில் துரத்தப்பட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இப்படியான நிலையில், இன்று பல திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா ஒளிபரப்பாக உள்ளது.
காரணம், எப்போதும் போல் வெண்பாவின் சதி தான். துர்கா, வெண்பா குறித்த உண்மைகளை கூறிய உடன் கோபமடைந்த கண்ணம்மா மருத்துவமனைக்கு சென்று வெண்பாவை பளார்! பளார்! என அறைகிறார். இதோடு கடத்த வார எபிசோட் முடிவடைந்தது. இதனால் வெண்பா தன்னுடைய சதிகளை பற்றி பாரதிக்கு தெரிந்து விடுமோ?? என்று அச்சப்படுகிறார். பாரதியிடம் உண்மைகளை மறைக்க வேறு ஒரு திட்டத்தை தீட்ட முடிவு செய்கிறார்.
பாரதி மருத்துவமனைக்கு வந்ததும், அவரிடம் கண்ணம்மா தன்னையும் பாரதியையும் இணைத்து தப்பாக பேசியதாக கூறுகிறார். குருட்டுத்தனமான கோபத்தில் இருக்கும் பாரதி வெண்பா சொன்ன எல்லாவற்றையும் அப்படியே நம்புகிறார். வெண்பா எரியும் தீயில் எண்ணெயினை ஊற்றுவது போல் பேசுகிறார்.
சூளுரைக்கும் கண்ணம்மா:
இதனால் கோபம் அடையும் பாரதி “ஏன் நான் உன்னை திருமணம் செய்து கொள்வதில் என்ன தவறு??” என்று கேட்கிறார். இது வெண்பாவை சந்தோச மழையில் நனைய வைக்கிறது. ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளாமல் பாரதியை வழி அனுப்புகிறார். அவர் சென்றதும் ஆர்ப்பரிப்பில் தன்னை மறக்கிறார், வெண்பா. இது ஒரு பக்கம் இருக்க பாரதியின் அம்மா சௌந்தர்யா கண்ணம்மா வேலை பார்க்கும் பெட்ரோல் பங்கினை கண்டுபிடித்து விடுகிறார்.
சௌந்தர்யாவை பார்த்து கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். கண்ணம்மாவை வீட்டிற்கு வரச் சொல்லி சௌந்தர்யா கெஞ்சியும், கண்ணம்மா அதனை மறுத்து விடுகிறார். பின், தனக்கு உங்களது ஆசிகள் மட்டும் இருந்தால் போதும் என்றும் தான் ‘உண்மையினை உலகிற்கு உணர்த்துவேன்’ என்று சூளுரைக்கிறார். இதனால் பாரதிக்கு எப்போது உண்மை தெரிய வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.