திருமணம் செய்து கொள்வதாக வாக்கு உறுதி கொடுத்து நடிகை பூர்ணாவை ஒரு மோசடி கும்பல் ஏமாத்த பார்த்து உள்ளதாகவும், அதற்குள் பூர்ணாவின் தாயார் போலீஸில் புகார் தெரிவித்து தெரிவித்து தப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஏமாற்றப் பார்த்த கும்பல்:
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. அவருக்கு சில மாதங்களுக்கு முன்னால் இருந்து அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பித்து உள்ளது. இவர் வீட்டிலும் பல இடங்களில் மாப்பிளை பார்த்து உள்ளனர். இந்தனை அறிந்த மோசடி கும்பல் ஒன்று இவர்களை தொடர்பு கொண்டு உள்ளது. தங்களை நகைகடை உரிமையாளர்கள் என்று கூறி டிக் டாக் மாடல் ஒருவரை மாப்பிள்ளையாக சித்தரித்து இவர்களை ஏமாற்ற பார்த்து உள்ளனர்.
இதனை நம்பிய பூர்ணா வீட்டினர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளனர். அந்த மாப்பிள்ளையாக கூறப்பட்ட நபரிடம் பூர்ணாவும் நன்றா தொலைபேசியில் பேசி உள்ளார். பெண் பார்க்கும் வைபவத்திற்கு வராதது இவர்களுக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அந்த கும்பல் பூர்ணாவின் வீட்டில் உள்ள கார், வீட்டில் வெளிப்புற தோற்றம் ஆகியவற்றை மொபைல் போனில் படம்பிடித்து சென்றதை சிசிடிவி காட்டிகள் மூலம் பார்த்த பூர்ணா குடும்பத்தினர் மிகுந்த சந்தேகத்திற்கு அழகி உள்ளனர். இதை பற்றி பூர்ணா மாப்பிளை என்று கூறப்பட்ட நபரிடம் கேள்விகளை கேட்டு உள்ளார். அவர் ஒரு கட்டத்தில் பூர்ணாவுடன் தனது தொடர்பை துண்டித்துள்ளார்.
போலீசில் புகார்:
விளக்கம் கேட்ட பூர்ணா வீட்டினரிடம் இந்த கும்பல் 1 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தரா விட்டால் பூர்ணாவின் திரையுலக வாழக்கையையே நாசப்படுத்தி விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதனால் பூர்ணா வீட்டினர் சார்பில் போலீசில் புகார் ஒன்றை குடுத்து உள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.