இன்று இருபாலினரும் சாதிக்கும் பொதுவான பிரச்னை “முடி உதிர்தல்” அதற்கு வீட்டில் செய்யும் ஈஸியான செய்முறை மூலம் சரி செய்யலாம்.
எதனால் ஏற்படுகிறது:
முடி உதிர்தல் பல காரணங்களால் நிகழலாம். அதில் முக்கியமாக விதவிதமாக ஷாம்பு பயன் படுத்துவது. மிகுந்த மனஉளைச்சல் ஆவது. ஊட்டச்சத்து குறைபாடு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணங்களால் முடி உதிர்கிறது.
இதற்கு வீட்டில் ஈஸியான பேக் மூலம் சரி செய்யலாம்.
தேவையான பொருட்கள்:
- முட்டை – 1
- ஆலிவ் ஆயில் – 1 ஸ்பூன்
- தேன் – சிறிதளவு
செய்முறை:
- முட்டையில் உள்ள வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவேண்டும்.
- இதனுடன், ஆலிவ் ஆயில் மற்றும் தேனை சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும்.
இந்த கலவையை உங்கள் வேர்க்கால்களில் படும் படி நன்றாக தேய்க்கவும். 20 நிமிடங்கள் கழித்து அதிக ஸ்ட்ரோங் இல்லாத ஷாம்பூ பயன் படுத்தி அலசவும். தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்வது நின்று விடும்.