சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்புக்கு நீதி கேட்டு ’JusticeForJeyarajAndFenix’ என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
தந்தை, மகன் விவகாரம்..!
சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான கடந்த 19 ம் தேதி ஊரடங்கு நேரத்தில் கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்களை கோவில்பட்டியில் உள்ள கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர். இசசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்தியளவில் முதலிடம் பிடித்த ஹேஸ்டேக்..!
இதற்கிடையில், சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. பல்வேறு தரப்பினரும் உயிரிழந்தவர்களுக்கு நீயாயம் கேட்டு சமூகவலைதளத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில், ’JusticeForJeyarajAndFenix’ ஹேஸ்டேக் தற்போது ட்வீட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.