செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஆர்.டி. அரசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கொரோனா தொற்று:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் மிக தீவிரமாக உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது. ஏற்கனவே திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இவரும் திமுக சார்பில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அதிமுக.,வைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
காவலர்கள் வீட்டிற்கு பால் சப்ளை கிடையாது – தமிழ்நாடு பால் முகர்வோர் சங்கம் அறிவிப்பு..!
இந்நிலையில் திமுக செய்யூர் எம்எல்ஏ ஆர்.டி அரசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். தொடர்ச்சியாக இரு எம்எல்ஏ.,க்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது திமுக கட்சி நிர்வாகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.