Tuesday, May 7, 2024

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

Must Read

குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலையே நிலவியது:

கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் உருவாகி அனைத்து மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனை அடுத்து சில நாட்களாக அனைத்து இடங்களிலும் வறண்ட வானிலையே காணப்பட்டு வந்தது. இப்படியான நிலையில், குமரிக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் உள்ள அநேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, குடவாசல், வட்டானம் பகுதிகளில் 6 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது.

பெண் குழந்தைக்கு அப்பாவான கேன் வில்லியம்சன் – ரசிகர்கள் வாழ்த்து மழை!!

நாகப்பட்டினம், மன்னார்குடி, வேதாரண்யம் பகுதிகளில் 5 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, பாபநாசம், பட்டுக்கோட்டை, திருப்பூண்டி பகுதிகளில் 4 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், புதுச்சேரி, பரமக்குடி, கந்தர்வகோட்டை பகுதிகளில் 3 செ.மீ கனமழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எந்த விதஎச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

புதிய வடிவில் கொள்ளையடிக்கும் கும்பல்., இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருதா? எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடி செயல்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூரை சேர்ந்த ஒரு பெண், 'தான் ஒரு மிகப்பெரிய...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -