கவிஞர் வைரமுத்து உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி – திரையுலகில் பரபரப்பு!!

0

நாடெங்கிலும் இந்த வருடம் ஆரம்பித்த காலத்தில் இருந்து பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என்றே சொல்லாம். கொரோனா ஒரு பக்கம் ஆட்டிப்படைத்தது. இப்பொழுது பாடலாசிரியரான வைரமுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

வைரமுத்து

கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தற்போது நோயின் வீரியம் குரைந்துள்ளதால் பல தளர்வுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனால் படப்பிடிப்புகள் திரையரங்குகள் என அனைத்தும் திறக்கப்பட்டு வருகிறது. படப்பிடிப்புககளும் வழக்கம் போல நடந்துக்கொண்டுள்ளது.

இப்படி சினிமா ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்க பாடலாசிரியரான வைரமுத்து உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் வைரமுத்து 5800 பாடல்கள் வரை எழுதியுள்ளார். வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம்.

அவரின் அந்த ஆழ்ந்த அர்த்தமுள்ள வரிகள் மக்களிடம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. சில மாதங்களுக்கு முன் கூட பாடகி சின்மயி பல குற்ற சாட்டுகளை இவர் மீது சுமத்தினார். இவர் இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரின் உதவியாளர் அவர் எப்போதும் போல செக்கப்காக தான் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here