நாடு முழுவதும் குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பீகாரில் “கன்யா உத்தன் யோஜனா” திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளுக்கு கீழ் ரூ.50,000 நிதியுதவி வழங்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். இதில் குறிப்பிட்ட வயதை பொறுத்து முதல் கட்ட தொகை வழங்கப்படுகிறது. அதன்படி அந்த பெண் குழந்தை படித்து பட்டம் பெறும் போது ரூ.50,000 நிதியுதவி மொத்தமாக வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!
இத்திட்டத்தில் பயன் பெறுவதற்கு பீகார் மாநிலத்தில் வசிக்கும் ஏழைக் குடும்பப் பெண் குழந்தையாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் 2 பெண்கள் பயனடையலாம். வயது மற்றும் மதம் போன்ற கட்டுப்பாடுகள் இல்லை என அறிவுறுத்தி உள்ளனர். இத்திட்டத்திற்கு மே 15ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.