ஸ்மார்ட்போன் உலகில் சாதனை படைத்து வரும் ரியல்மீ நிறுவனம் தற்போது கைக்கடிகாரத்தில் தனது கவனத்தை செலுத்துகிறது. ரியல்மீ S PRO வாட்ச் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் அறிமுகப்படுத்த போவதாக தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரியல்மீ S PRO வாட்ச்:
ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் பிரபல முன்னனி நிறுவனங்கள் ஆர்வம் கட்டி வருகின்றன. வாட்சில் இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதா என ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு கைக்கடிகாரத்தில் அத்தனை சிறப்பம்சங்களோடு தயாரிக்கிறார்கள். இப்போது ஸ்மார்ட்போன் காட்டிலும் ஸ்மார்ட்வாட்ச்க்கு மவுசு அதிகம் என்றே சொல்லலாம். இப்படி வாட்ச் தயாரிப்பில் இப்போது புதிய பரிமாணம் எடுத்துள்ளது ரியல்மீ நிறுவனம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ரியல்மீ நிறுவனத்தின் தலைமை அதிகாரி மாதவ் சேத் ரியல்மீ நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பான ரியல்மீ S PRO வாட்ச் டீசர் வெளியிட்டுள்ளார். ரியல்மீ நிறுவனத்தின் ரியல்மீ S PRO வாட்ச் வெகுவிரைவில் இந்தியா மற்றும் ஐரோப்பா நாடுகளின் சந்தைக்கு கொண்டுவரப்படும் என்றார்.
ட்விட்டரில் பதிவு:
ரியல்மீ S PRO வாட்ச்ன் டீசர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரியல் மீயின் சூப்பர் டிரண்டி வாட்ச்களை பற்றி “ரெடி டு மீட் தி ப்ரோ ட்ரென்ட்ஸ்டெர் ” என அறிமுகப்படுத்தி ஸ்மார்ட் வாட்சுக்காக தங்கள் நிறுவனம் பரிசீலித்த டிசைன்களையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். மேலும், ரியல்மீ S PRO மாடல் டீசர் வெளியிட்டுள்ளார். ரியல்மீ S PRO மாடல் ஸ்மார்ட் வாட்ச் உடன் S ஸ்மார்ட் வாட்சையும் ரியல் மீ அறிமுகம் செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள் தான் நமது நாட்டின் உயிரோட்டம் – பிறந்தநாள் பதிவாக யுவராஜ் ட்வீட்!!
பெரிய 1.39″ டச் AMOLED தொடு திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட் வாட்ச் மெட்டல் (உலோகத்தால்) வடிவமைக்கப்பட்டுள்ளது. 420mAh பேட்டரி கொண்டது. மேலும், ஸ்டெப் ட்ராக்கிங், டிஸ்டன்ஸ் ட்ராக்கிங், கலோரி அளவு, இதய துடிப்பு பதிவு போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. பாகிஸ்தானில் அறிமுகப்படுத்திய ரியல்மீ S வாட்ச் ரூ.7000 ஆகும். தற்போது யூரோப நாடுகளில் ரியல்மீ S வாட்ச் கிடைக்கிறது. ரியல்மீ நிறுவனத்தின் இந்த புதிய ரியல்மீ S PRO மாடல் எப்போது சந்தைக்கு விற்பனைக்கு வரும் என ஆர்வமாக இருக்கிறது என்றே கூறலாம்.