அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் குறித்த ஆலோசனை கூட்டம் 20ம் தேதி தொடங்க போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரம்
நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்து மக்கள் பரவலாக பேசிகொன்டு இருகிறார்கள். யார் வெற்றி பெறுவர் என்று மக்கள் மனதில் ஒரு கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் தலைவி அம்மா ஜெயலலிதாவும் திமுகவில் தலைவர் கலைஞரும் இல்லாமல் நடக்கவிருக்கும் முதல் தேர்தல் என்பதால் மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இத்தேர்தல் குறித்த பிரச்சாரங்கள் அதிமுகவில் ஒரு பக்கம் நடந்து கொண்டு வருகின்றன. திமுகவில் இன்னும் பிரச்சாரம் தொடங்கப்படாத நிலையில் அது குறித்து கூட்டம் நடத்த போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார். கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளையில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பல முறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
கடந்த 2 முறையாக கைவிட்ட ஆட்சியை இந்த முறை கைப்பற்ற வேண்டும் என்பது திமுகவின் குறிக்கோள் என்றே கூறலாம். தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே, தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டது திமுக.
மாவட்ட, மாநகர செயலாளர்கள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்களுடன் ஸ்டாலின் 20ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார், என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.