தமிழகத்தில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கனமழை:
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகின்றது. இதற்கு வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி தான் காரணம் என்று கூறப்பட்டது. அதே போல் இந்த மாதத்தின் துவக்கத்தில் இருந்தே காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான், வங்காள வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் நிலை கொண்டு வருகின்றது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதனை தொடர்ந்து தற்போது வானிலை ஆய்வு மையம் சார்பில் பருவநிலை மாற்றம் குறித்து கூறப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலசந்தர் நிருபர்களிடம் கூறியதாவது “பசிபிக் கடல் பகுதியில் தற்போது புதிய நினோ நிகழ்வு நிகழ்ந்து வருகின்றது. இதனால் தென்மேற்கு பருவநிலை காலம் தொடர்கிறது”
சென்னையில் கனமழை:
அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகின்றன. இவை அனைத்தும் தென் இந்திய கடற்பரப்பை கடந்து செல்லும். அதனால் வரும் 22 ஆம் தேதி மேற்கு காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிறகு, வரும் 25 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவநிலை துவங்கும்” இவ்வாறாக தெரிவித்துள்ளார். இந்த பருவநிலை மாற்றங்களால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வானிலை மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவிற்கு கொரோனா – முதல்வர் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அச்சம்!!
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் உள்ள ராயப்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, எலும்புர், தாம்பரம்,கிழக்கு கடற்கரை பகுதி, காஞ்சிபுரம் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.