ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் நடக்கவுள்ள ஒரு நாள் போட்டிகளுக்காக பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் இதனை மிகவும் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் போட்டிகள்:
நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடர் போட்டிகளுக்கு அடுத்து தற்போது இந்தியாவின் கிரிக்கெட் அணி வீரர்கள் ஒரு நாள் போட்டிகளுக்காக ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னிக்கு சென்றுள்ளனர். சிட்னி சென்றுள்ள வீரர்கள் கொரோனா பரவல் நோய் தொற்று காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபட உள்ளனர். அப்போது பயிற்சிகளில் ஈடுபடவும் இருந்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதற்கான பயிற்சி வீடியோக்களை கேப்டன் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ‘Love Test Cricket Practice Sessions’ என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தான் பயிற்சியில் ஈடுபட்டிருப்பது மிகவும் பிடித்திருப்பதாக கூறியுள்ளார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆஸ்திரேலியாவில் முதல் பகலிரவு போட்டிகளில் மட்டுமே அவர் பங்கேற்கவுள்ளார். அவரது மனைவியான அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமான இருக்கும் நிலையில் குழந்தை பிறப்பையொட்டி இந்தியா திரும்பவுள்ளார்.
நவம்பர் 23 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
சக வீரர்களான சமி, பும்ராஹ் போன்றவர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாக அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்துதலிலும் ஈடுபட்டுள்ளனர். அடுத்த மாதம் 17 ஆம் தேதி தான் போட்டிகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.