கடைக்குட்டி கண்ணனுக்கு புதிய ஜோடியாகும் ஐஸ்வர்யா – காதல் கதைக்களமான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!!

0

விஜய் டிவியில் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்ததடுத்த பல சுவாரசியமான கட்டங்கள் ஒளிபரப்பாகி கொண்டுள்ளது. மேலும் இத்தனை நாட்களாக தனியாக இருந்த கண்ணனுக்கு தற்போது புது ஜோடியும் வந்துள்ளது. அதாவது சீரியலில் வந்திருக்கும் ஐஸ்வர்யா தான் கண்ணனுக்கு ஜோடி.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நேற்றைய எபிசோடில் குழந்தையை பார்க்க வந்த சத்யமூர்த்தியிடம் ஜீவாவை கடைக்கு துணையாக அனுப்ப சொல்ல இதனால் கோபமடைந்து தன் கடையை பார்த்துக் கொள்ளவே இங்கு நேரமில்லை என்று வேறு ஆள் இருந்தால் சொல்கிறேன் என்று சத்தியமூர்த்தி மூஞ்சியில் அடித்தார் போல சொல்லி விடுகிறார்.

மேலும் ஜனார்தனனும் சத்தியமூர்த்தி சென்றதும் எப்படி ஜீவாவை வழிக்கு கொண்டு வருவது என்று எனக்கு தெரியும் என்று கூறுகிறார். அடுத்ததாக கஸ்தூரியிடம் அனுமதி கேட்டுவிட்டு ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைக்கிறார். ஐஸ்வர்யாவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இன்றைய எபிசோடில் ஐஸ்வர்யாவை வீட்டிற்கு அழைத்து வருகிறார் முல்லை. வீட்டில் ஹாலில் அமர்ந்திருக்கும் கண்ணன் ஐஸ்வர்யாவை கண்டதும் காதல் பார்வை பார்க்கிறார். மேலும் பின்னாடி பல்ப் வேறு எரிகிறது. அனைவரும் ஐஸ்வர்யாவை இறக்கமாக பார்க்க கண்ணன் அவரை ரசித்துக்கொண்டே பார்க்கிறார்.

மேலும் ஐஸ்வர்யா மீது கண்ணனுக்கு காதலும் ஏற்படுகிறது. இதனை கதிர் பார்த்து என்ன என்று கேட்க, ஒன்றுமில்லை என்று ஐஸ்வர்யாவை பார்த்துக் கொண்டே செல்கிறார். அடுத்ததாக ஜீவாவிற்கு மீனா வீடியோ கால் செய்ய இன்னும் அந்த ரூமில் இருப்பதை பார்த்து கோவமடைகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எனக்கு அந்த வீட்டில் இருக்கும் சின்ன சந்தோசமே அந்த ரூம் தான் என்று ஜீவாவை கண்டபடி திட்டுகிறார். நான் அங்கு வர வேண்டும் என்றால் அந்த ரூம் கண்டிப்பாக வேண்டும் என்றும் கூறுகிறார். அடுத்ததாக குழந்தைக்கு தொட்டில் போடும் நிகழ்ச்சிக்கு குழந்தைக்கு என்ன வாங்குவது என்று தனம், முல்லை மற்றும் சத்தியமூர்த்தி ஆலோசித்துக் கொண்டுள்ளனர். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here