ஒருவர் சும்மாவே இருந்து யூடிப்பில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி உள்ளது.
திறமைகள் வெளிப்பட்டது:
இந்த கொரோனா பொது முடக்கத்தால் பலரும் தங்களது திறமைகளை கண்டறிந்தனர். அப்படி கண்டறிந்தவர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அனைவர்க்கும் காட்டினார்.
அதிலும், அனைவரும் தங்கள் திறமைகள் மூலம் பணம் சம்பாரிக்கும் இடம் தான் சமூக வலைத்தளமான, யூ டிப். தற்போது ஒருவர் எதுமே செய்யாமல் இருந்து சாதனை படைத்துள்ளார்.
சும்மா இருந்த வீடியோ:
இந்தோனேசியாவை சேர்ந்தவர் தான் முஹம்மது திதித். இவர் வீடியோ ஆரம்பத்தில் இருந்து ஒரு வேலையையும் செய்யவில்லை. இது போன்ற வீடியோ சமூக வழிதலகங்களில் பல உண்டு. ஆனால், நேர்மாறாக இந்த வீடியோ 26 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
இந்த விடியோவை பொறுமையாக பார்த்த பலர் ” அவர் சும்மா ஒன்றும் இல்லை, அவ்வப்போது சில அசைவுகளை மேற்கொள்ளகிறார்” என்றும், இன்னும் சிலர் ” அவர் எதனை 2 மணி நேரமாக யோசிக்கிறார் என்று தான் தெரியவில்லை” என்றும் கூறியுள்ளனர். எது எப்படியோ ஒருவர் சும்மா இருந்து பணம் சம்பாரித்துள்ளார்.
வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
இது குறித்து முஹம்மது திதித்.கூறியதாவது ” என்னை எல்லாரும் இளைஞர்களுக்காகவும், அவர்களது நலனுக்காகவும் ஒரு வீடியோவை தயாரிக்க சொன்னார்கள். அதனை தான் நான் கஷ்டப்பட்டு செய்துள்ளேன். BOOM..” என்று தெரிவித்துள்ளார்.