ஆசிரியரை கடத்தி Gun பாயிண்டில் திருமணம் செய்த மாணவி – பின்னணியில் இருந்த மர்ம கும்பல் – என்ன நடந்தது?

0
ஆசிரியரை கடத்தி Gun பாயிண்டில் திருமணம் செய்த மாணவி - பின்னணியில் இருந்த மர்ம கும்பல் - என்ன நடந்தது?
இன்றைய காலகட்டத்தில் பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் மீது அலாதி அன்பு கொண்டு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சில மாணவர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி சில சம்பவங்களும் உலகில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இது ஒரு தவறான உணர்வு என்று அறியாமல் இந்த தவறை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் ஆசிரியரை கடத்தி சென்று கல்யாணம் செய்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது பீகாரில் உள்ள ஒரு  அரசு பள்ளியில் குமார் என்ற ஆசிரியர் சேர்ந்து கொஞ்சம் நாட்கள் ஆன நிலையில், கடந்த புதன்கிழமை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் அடுத்த நாள் வியாழக்கிழமை அந்த ஆசிரியரை கண்டு பிடித்த போலீசாருக்கு பல உண்மைகள் தெரிய வந்தது. அதாவது குமார் வேலை பார்க்கும் பள்ளியில் படித்த ஒரு மாணவியை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து கொள்ளுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர். வேறு வழி இன்றி ஆசிரியர் அந்த மாணவி கழுத்தில் தாலி கட்டியதாக கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் வந்த நிலையில் கல்யாணம் சட்டப்படி செல்லாது என்றும்,இதற்கு முன்னாடி நடந்த ஒரு கட்டாய கல்யாணத்தை முன் உதாரணம் காட்டி குமார் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here