தமிழகத்தில் போக்குவரத்து துறை பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்களவை தேர்தலுக்காக, வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் 8 ஆயிரத்து 304 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டும் கூடுதலாக 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.