2024 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் மீது தற்போது அனைவரின் கவனமும் திரும்பி உள்ளது. இத்தொடருக்கான மினி ஏலம் வரும் 19ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் மூலம் கடந்த (நவம்பர் 26) தேதி வாங்கியது. இதையடுத்து இந்திய வீரர் சுப்மன் கில் குஜராத் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இது தொடர்பாக பல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், கேன் வில்லியம்சனை தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் பார்த்தபிறகு, அவர் குஜராத் அணிக்கு ஒருமுறையாவது தலைமை தாங்க வேண்டும் என நினைத்தேன் என்றும் கூறியுள்ளார். சுப்மன் கில் ஒரு தவறான தேர்வு என நான் கூறவில்லை என்றார். ஆனால் ஒரு பொறுப்பை ஏற்பதற்கு உங்களுக்கு அனுபவம் தேவை என தெரிவித்து தனது கருத்தை முடித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் நிலுவைத் தொகையுடன் இவர்களுக்கான ஊதியம் உயர்வு…, வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!