தமிழகத்தில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மதுபான கடைகளை ஒழிக்க வேண்டும் என்று பெண்கள் பலர் போராடி வரும் நிலையில், தற்போது குடிமகன்கள் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது ராணிப்பேட்டை அருகே இருக்கும் கலவை பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வந்த நிலையில் திடீரென கடை இழுத்து மூடப்பட்டது.
மது பிரியர்கள் கிட்டத்தட்ட 18 கி மீ கடந்து சென்று மது குடிக்கும் அவல நிலையில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இதனால் கள்ளச்சந்தையில் மது அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் பெட்ரோல் செலவும் இருந்து வருவதாக வருத்தப்பட்ட 40-க்கும் மேற்பட்ட மது பிரியர்கள் இதற்கு முடிவு கட்ட ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு சென்று எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.