தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் மாதந்தோறும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை வேறு வர உள்ளதால் இந்த ஆண்டு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா?? இல்லை பணம் வழங்கப்படுமா?? என மக்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் டிசம்பர் 9ம் தேதி ரேஷன் கார்டில் உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற மாற்றங்களை செய்ய முகாம்கள் நடக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
தற்போது இதைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பொதுமக்களுக்கான குறைதீர்ப்பு முகாம் 9ம் தேதி நடக்க உள்ளது. எனவே ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அதை உடனடியாக இந்த முகாமில் தெரிவிக்கலாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
என்னது.., தமிழுக்கு கல்யாணம் ஆகிடுச்சா?? உண்மையை அறியும் மேக்னா.., மாட்டிக்கொள்ளும் நமச்சி!!