ஒவ்வொரு மாநில அரசும், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியவர்கள் என அனைவருக்கும் உகந்தவாறு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதில், விதவைகள் தங்களது வாழ்வில் முன்னேற ஊக்குவிப்பதற்காக ஒரு குறிப்பிட்டத் தொகையை அரசு நலன்புரி ஓய்வூதியமாக வழங்கி வருகிறது.
இத்தகைய ஓய்வூதியத்தை பெற மறுமணம் செய்யவில்லை என்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். கேரளாவில் சுமார் 82758 விதவைகள் இத்தகைய ஆவணங்களை சமர்ப்பிக்க தவறி உள்ளதால் இவர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, பலர் இத்தகைய ஆவணங்களை சமர்ப்பித்த போதும் ஓய்வூதியம் கிடைக்க பெறவில்லை. இதனால், அரசுக்கு 13.2 கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளதால் தொழில்நுட்ப பிழை காரணம் காட்டி ஓய்வூதியத்தை நிறுத்தி உள்ளதாக பரவலான தகவல் வெளியாகி உள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
ஐயா.., 18 கிலோ மீட்டர் தாண்டி போய் தண்ணி அடிக்கிறோம்யா? கொஞ்சம் இரக்கம் காட்டுங்கய்யா?