Thursday, May 2, 2024

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

Must Read

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழை மழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் கனமழை:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது.

சென்னை மாவட்டத்தைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

வெப்பநிலை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தேவலா பகுதியில் அதிகபட்சமாக 21 செ.மீ மழை பதிவாகி உள்ளது, நாமக்கல் மாவட்டத்தில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது, பொன்னகரம், பகுதியில் 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது, திருவண்ணாமலை, சேண்டமங்கலம் பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகி உள்ளது, குறைந்தபட்சமாக காரைக்கல், நீடமங்கலம், திருப்பானி, குளித்தலை மற்றும் ஓசூர் பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

  • செப்டம்பர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தென்மேற்கு அரபிக் கடலில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பதிகளுக்குசெல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகளில் காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அப்பதிகளுக்கு செல்ல வேண்டாம்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை., புதிய ரேஷன் கார்டுதாரர்களுக்கும் கிடைக்கும்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் ரூ.1000 உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு முன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -