தமிழகம் முழுவதும் பல இடங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் இந்த வெயிலின் சூட்டை தணிக்க மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் இப்போது சென்னை மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை மக்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் குடிநீர் அதிகமாக அருந்த வேண்டும் என்றும் பழங்களை அதிகமாக சாப்பிடவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.