புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதால் இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெறுவதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்
நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று காலை எடுக்கப்பட்ட நிலவரப்படி 36,465 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 705 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 35,152 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
புதுச்சேரியில் இதுவரை 3.7 லட்சம் பேர் கொரோனா பரிசோதனை செய்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 602 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கு:
நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பின்பு கொரோனா பாதிப்பினை பொறுத்து அந்தந்த மாநில அரசுகள் சில தளர்வுகளை வெளியிட்டு வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா அதிகரித்து வருவதால் நவ.30 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஆனால் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மேலும் சில தளர்வுகளை மாநில அரசு இன்று வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இருந்த இரவு நேர ஊரடங்கை திரும்பப் பெற்றதாக அறிவித்துள்ளது. மேலும் தியேட்டர், பூங்காக்கள், ஹோட்டல்கள், கோவில்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் போன்றவை புதுச்சேரி அரசு விதிக்கப்பட்ட நேரங்களில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது. இத்தகைய தளர்வுகள் விதிக்கப்பட்டாலும் மக்கள் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.