தனது ஐபிஎஸ் கனவை பற்றி சரவணனிடம் கூற வரும் சந்தியா – ஏற்றுக்கொள்வாரா?? எதிர்பாராத திருப்பங்களுடன் ‘ராஜா ராணி 2’!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. தற்போது அம்மா, அப்பாவை இழந்து அண்ணனின் கட்டாயத்தின் பெயரில் சரவணனை திருமணம் செய்து கொள்கிறார் சந்தியா. பல பிரச்சனைகளை கடந்து தற்போது அவர்களின் திருமணமும் நல்ல படியாக நடக்கிறது.

ராஜா ராணி

ராஜா ராணி சீரியலில் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் சந்தியா அதற்காக தொடர்ந்து படித்துக் கொண்டும் இருந்தார். இந்நிலையில் அவரின் அப்பா, அம்மா திடீரென ஒரு விபத்தில் இறந்து போகவே தன் கட்டுப்பாட்டில் இருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் சந்தியாவின் அண்ணன் தன் சுயநலத்திற்காக சந்தியாவை மிரட்டி திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். ஆரம்பத்தில் மறுத்த சந்தியா நாளடைவில் தன் அண்ணிக்காக இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொள்கிறார். மேலும் சரவணன் செய்யும் தொழிலையும் மறைத்து எம்.பி.ஏ மாப்பிள்ளை என்று கூறி சந்தியாவிற்கு பேசி முடிக்கிறார்.

திருமணத்திற்கு முந்தைய நாள் தான் சரவணனை பற்றி சந்தியாவிற்கு தெரிய வருகிறது. ஆனாலும் அண்ணிக்காக இந்த திருமணத்தையும் செய்துகொள்கிறார். எப்படியோ பல தடங்கல்களை தாண்டி சந்தியா திருமணம் நடந்தேறுகிறது. மேலும் அண்ணியை விட்டு பிரியும் சந்தியா அழுகையுடன் செல்ல, தனக்கு திருமணம் நடந்தது கூட புரியவில்லை.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எல்லாம் கனவு போல தெரிகிறது. இறுதியாக புகுந்த வீட்டிற்கு செல்லும் சந்தியாவை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்ல வீடே நீரால் நிரம்பி போய் உள்ளது. என்ன செய்வது என்று தெரியாமல் அனைவரும் வேலையை பார்த்துக் கொண்டிருக்க சந்தியா ஓரிடத்தில் நிற்பதை பார்த்து சிவகாமி அவரை மிரட்டி வேலை வாங்குகிறார்.

வேலை பார்த்துக் கொண்டிருக்கும் சந்தியாவின் காலில் ஏதோ குத்த வலி தாங்காமல் கத்துகிறார். எல்லாரும் வேலையை முடித்து முதலிரவு அறைக்கு சந்தியாவையும், சரவணனையும் அனுப்புகின்றனர். சந்தியா ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவை சரவணனிடம் கூற வர அப்பொழுது கதவை தட்டுகின்றனர்.

வெளியில் கரண்ட் இல்லாமல் அம்மா அப்பா ஹாலில் படுத்திருப்பதை பார்த்து சரவணன் நாம் வெளியில் படுத்துக் கொள்ளலாம் என்று கூறி சந்தியாவை வெளியில் படுக்க வைக்கிறார். ஜோசியரும், சிவகாமிக்கு கால் செய்து இது முதலிரவிற்கு நல்ல நேரம் இல்லை என்று கூற சந்தியாவை வெளியிலேயே படுக்க வைக்கின்றனர்.

இதோடு எபிசோடும் முடிவடைகிறது. சந்தியாவின் கனவை சரவணன் ஏற்றுக்கொள்வாரா?? சந்தியாவின் ஆசை நிறைவேறுமா?? என்று வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here