Friday, May 17, 2024

145 கிமீ தொலைவில் இன்றிரவு கரையை கடக்கும் ‘நிவர் புயல்’ – உஷார் நிலையில் தமிழகம்!!

Must Read

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வினால் நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இது இன்று மாலை அதிதீவிர புயலாக மாறி 145 கி.மீ தொலைவில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிதீவிர புயல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் நிவர் என்ற புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவான ஒரு சில மாற்றங்களால் உருவானது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த மண்டலமாக மாறி புயல் உருவாகியது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

nivar cylone
nivar cylone

நேற்று அதிகாலைபொழுதில் தீவிரமடைந்த இத்தகைய புயல் அடுத்த 12 மணிநேரத்தில் அதிதீவிர புயலாக மாறியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று அதிதீவிரமடைந்த புயல் இன்று மாலை 145 கி.மீ தொலைவில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடைக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை மற்றும் எச்சரிக்கை

இத்தகைய அதிதீவிர புயலால் தமிழக கடலோர பகுதிகளான நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. துறைமுகங்களில் புயல் எச்சரிக்கையை வெளிப்படுத்து விதமாக 3 மற்றும் 6 ஆம் கட்ட எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

heavy rain in tamilnadu
heavy rain in tamilnadu

மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்று அதிகமாக வீசும் என்று தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பொதுமக்களை பள்ளி மற்றும் மண்டபங்களில் தங்கவைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே., பாமாயில் & துவரம் பருப்பு கிடைப்பதில் சிக்கலா? அரசு வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் பல்வேறு ரேஷன் கடைகளிலும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -