துளசியின் வீட்டை விட்டு வெளியேறிய கண்ணம்மா, பரிதவிக்கும் சௌந்தர்யா – சூடுபிடிக்கும் ‘பாரதி கண்ணம்மா’!!

1

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்து என்ன நடக்கும்?? என்று மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். இன்றைய எபிசோடில் கண்ணம்மா, துளசியுடன் சௌந்தர்யா பேசுவதை பார்த்து விட அங்கிருந்து கோவமாக செல்கிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் முந்தைய எபிசோடில் கண்ணம்மா தன் குழந்தை என்று தெரியாமல் பால் கொடுக்கிறார். இதனால் அந்த குழந்தையிடம் எதோ ஒரு உணர்வு தோன்ற குழந்தையை பிரிய மனம் இல்லாமல் தவிக்கிறார். அதற்கடுத்து பாரதியும் கண்ணம்மாவை கோவிலில் பார்த்து விட கோபமடைந்து அங்கு சென்று கண்ணம்மாவை கண்டபடி பேசுகிறார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அங்கிருப்பவர்கள் இது கண்ணம்மாவின் கணவர் என்று தெரியவர இரண்டு பேரையும் ஒன்று சேர்த்து குழந்தையை ஆசிர்வதிக்க சொல்கின்றனர். வேறு வழியில்லாமல் ஒருமனதாக குழந்தைக்கு பாரதி ஆசீர்வாதம் செய்கிறார். இதனை தூரத்தில் இருந்து பார்க்கும் துர்கா இருவரும் சேர்ந்துவிட்டதாக தப்பாக நினைத்து அங்கிருந்து செல்கிறார்.

இன்றைய எபிசோடில் கண்ணம்மாவின் குழந்தையை தூரத்தில் இருந்து பார்க்கும் சௌந்தர்யாவிற்கு குழந்தையை தானும் ஆசிர்வதிக்க வேண்டும் என்று ஆசை எழ துளசியிடம் கால் செய்து கேட்கின்றனர். துளசியும் அவர்கள் கேட்டதற்கு இணங்க குழந்தையை தூக்கி கொண்டு வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

குழந்தையை ஆசையுடன் தூக்கி கொஞ்சிவிட்டு துளசியிடம் குழந்தையை தருகின்றனர். அந்த நேரம் பார்த்து கண்ணம்மா அங்கு வர துளசி அதிர்ச்சியடைகிறார். என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க கண்ணம்மா துளசியை முறைத்துக் கொண்டுள்ளார்.

மேலும் துளசியை பார்த்து, உன்னை எவ்வளவு நம்புனேன். ‘இப்படி துரோகம் பண்ணிட்டியே உன்ன சொந்த தங்கச்சியா தான நெனச்சேன்’ என்று கூறுகிறார். துளசி என்ன சொல்லியும் கண்ணம்மா கேட்பதாக இல்லை. வேகமாக அங்கிருந்து செல்கிறார். துளசி இதனை சௌந்தர்யாவிடம் சொல்ல சௌந்தர்யா வேணு கண்ணம்மாவை சமாதானம் செய்ய ஓடி வருகின்றனர்.

ஆனால் அதற்குள் கண்ணம்மா ஆட்டோ ஏறி அங்கிருந்து சென்று விடுகிறார். இது அனைத்தையும் பாரதி பார்த்து விடுகிறார். சௌந்தர்யா காரை எடுத்துக்கொண்டு செல்ல பாரதியும் அவர்களை பின்பற்றி செல்கிறார். கண்ணம்மா நேராக துளசி வீட்டிற்கு வந்து தனது பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு வெளியே வருகிறார்.

அந்த நேரத்தில் சரியாக சௌந்தர்யாவும் வருகிறார். கண்ணம்மாவிடம் இங்கிருந்து போக வேண்டாம் என எவ்வளவு கெஞ்சியும் கண்ணம்மா கேட்பதாக இல்லை. தான் ஒரு காசு கூட துளசியிடம் கொடுக்கவில்லை. நீ பத்திரமா இருந்தா போதும்னு தான் துளசியிடம் தங்க வைக்க ஏற்பாடு செய்தேன் என்று கூறுகிறார்.

ஆனால் எதையும் கேட்கும் மனநிலையில் கண்ணம்மா இல்லை. அப்பொழுது பாரதியும் அங்கு வர சௌதர்யா கெஞ்சி கொண்டிருப்பதை அங்கிருந்து பார்க்கிறார். இதனால் பாரதி கோபமடைந்து அம்மா என்று கத்த எபிசோடும் முடிவடைகிறது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here