வரும் 2021 ஆம் ஆண்டு முதல், லேண்ட்லைனில் இருந்து மற்றவர் மொபைல் போனிற்கு அழைக்க பூஜ்யம் என்ற எண்ணை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது வரும் ஜனவரி 1 ஆம் தேதி அமலுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
லேண்ட்லைன்:
சில வருடங்களுக்கு முன்பு எங்கு பார்த்தாலும் லேண்ட்லைன் சேவை இருக்கும். ஆனால் இன்று சில இடங்களில் மட்டுமே அதனை உபயோகம் செய்கிறார்கள். ஏன்னென்றால் அவர்கள் கையில் இன்று மொபைல் போன் இருப்பதனால், லேண்ட்லைனை பார்ப்பது மிகவும் கடினம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் லேண்ட்லைனில் இருந்து மொபைல் போனிற்கு அழைக்க புதிய முறை விரைவில் அமலாகிறது. இந்த புதிய முறையை பற்றி மத்திய அரசு வெளியிட்ட தகவல் என்னவென்றால், லேண்ட்லைனிலிருந்து மற்ற செல்போனுக்கு அழைக்கும்போது மொபைல் நம்பருக்கு முன்பாக, பூஜ்ஜியம் என்ற எண்னை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை வரும் ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இந்த புதிய முறை குறித்து தொலைபேசி நிறுவனத்திற்கு ஏதாவது மாற்று கருத்து இருந்தால் கூறலாம் மற்றும் இதனை செயல்படுத்த ஜனவரி 1 ஆம் தேதி வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.