தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவிட்டார். இந்நிலையில் பிரதமர் மோடி அவர்கள் மே 3 வரை நாடு தழுவிய ஊரடங்கை நீட்டித்தார். மேலும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு பல்வேறு விலக்குகளும் அளிக்கப்பட்டு உள்ளன.
காவல்துறை அதிரடி:
இந்தியாவில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வுகளும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள கொரோனா தாக்கத்தின் அடிப்படையில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிலும் தமிழகம் தான் 22 மாவட்டங்கள் ரெட் zone ஆக அறிவிக்கப்பட்டு இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
24 மணிநேரத்தில் 1001 பேருக்கு பாதிப்பு – இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா..!
தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,18,553 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தடை உத்தரவை மீறியதாக 2,05,054 வழக்குகள் பதியப்பட்டு 1,85,896 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை ரூ. 98,07,394 அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |