இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1001 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு, உயிர் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 23 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிர் இழப்புகளின் எண்ணிக்கையும் 437 ஆக அதிகரித்து உள்ளது. நாட்டில் கொரோனவால் 13,387 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் நல்ல செய்தி என்னவென்றால் இதுவரை 1,777 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து உள்ளனர்.
இந்தியாவில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு தான் அதிக உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு உள்ளன.
மாநில வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விபரம்:
- மஹாராஷ்டிரா – 3205 பேர்
- டெல்லி – 1640 பேர்
- தமிழ்நாடு – 1267 பேர்
- மத்தியப்பிரதேசம் – 1120 பேர்
- ராஜஸ்தான் – 1131 பேர்
- குஜராத் – 930 பேர்
- உத்திரப்பிரதேசம் – 805 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |