14 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் உள்ள DY படேல் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 168 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய மும்பை அணி 146 ரன்கள் மட்டுமே அடித்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் முறையாக IPL தொடரை வென்றது. இதை அடுத்த தற்போது வரை 5 கோப்பைகளை CSK வென்றுள்ளது. தற்போது சென்னை அணி சிறந்து விளங்கிய இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.